நவராத்திரி ஸ்பெஷல்...

நவராத்திரி ஸ்பெஷல் !

#நவராத்திரி_பூஜையும்_சொல்ல_வேண்டிய_ஸ்துதிகளும்........

நவராத்திரி 9நாட்களிலும் ஒவ்வொரு அம்பிகையை ஒவ்வொரு விதமான மந்திரங்கள் சொல்லி பூஜிக்க வேண்டும். முதல் 3நாள் துர்காவிற்கும்,அடுத்த 3நாள் லக்ஷ்மிக்கும் ,கடைசி 3நாட்கள் சரஸ்வதிக்கும் உரிய நாட்கள் ஆகும்.

முதல் நாள்--- மகா கணபதி பூஜையுடன் தொடங்கி ,கலசபூஜை செய்து கலச ஆவாஹனம் செய்து துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்யலாம்.மஹிஷாஸுரமர்த்தினி மந்திரம் பாராயணம் செய்யலாம்.


2ம்நாள்---இச்சாசக்தியான துர்க்கையை துர்கா அஷ்டோத்திரம்,ஸ்ரீ லலிதா திரிசதி ,ஸ்ரீ காமாட்சி மந்திரம் பாராயணம் செய்து வழிபட வேண்டும்.

3ம்நாள்---துர்கா அஷ்டோத்திரம்,ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ லலிதா நவரத்தின மாலா பாராயணம் செய்தல் வேண்டும்.

4ம்நாள்----ஸ்ரீ மகாலக்ஷ்மியை தியானம் செய்து,லக்ஷ்மி அஷ்டோத்திரம் படித்து ,பூஜை செய்வது நல்லது.ஸ்ரீ கனகதாரா மந்திரம்,ஸ்ரீ அன்ன பூரணாஷ்டகம் ,அஷ்டலக்ஷ்மி மந்திரம் சொல்ல வேண்டும்.

எல்லா நாட்களிலுமே பூஜை முடிவில் "ஸ்ரீ துர்கா லக்ஷ்மி சரஸ்வதீப்யோநம :"என்று கூறி மலர்களுடன்,குங்குமம்,அட்சதை ஆகியவற்றை அம்மாளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

5ம்நாள்----லக்ஷ்மி அஷ்டோத்திரம்,ஸ்ரீ கனகதாரா மந்திரம்,ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் பாராயணம்,ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாராயணம் செய்வது நன்மை பயக்கும்.

6ம் நாள்---லக்ஷ்மி அஷ்டோத்திரம்,மகாலக்ஷ்மி ஸஹஸ்ரநாம பூஜை செய்தல் வேண்டும்.

7ம் நாள்----சரஸ்வதி அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்து ,ஸ்ரீசாரதா புஜங்க மந்திரம் மற்றும் ஸ்ரீ தேவி கட்கமாலா படிக்க வேண்டும்.

8ம்நாள்----சரஸ்வதி நாமாவளி,ஸ்ரீ பவானி புஜங்கள் ,சரஸ்வதிக்கு உரிய பாடல்கள்,மந்திரங்கள் சொல்லுதல் நன்று. இன்று தேவி நரசிம்மி வடிவில் சினம் தனிந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

9ம் நாள் ---சாமுண்டி மாதா  அம்பு,அங்குசம் தரித்த   ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியாக இன்று தோன்றுகிறாள்.சரஸ்வதி அஸ்டோத்திரம்,ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் சிறந்த பலன் தரும்.

10ம் நாள்---வெற்றியை குறிக்கும் விஜயதசமி நாளாகும்.வெற்றி திருமகளாக தேவியை  அலங்கரிக்க,நவநிதியும் பெற்று நீடுழி வாழலாம் என்பது ஐதீகம்.